- வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
- இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி தெருவை சேர்ந்த முருகேஷ் மகன் ராஜேஷ் (வயது27). இவர் திருப்பத்தூர் சாலையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிள் சென்று செல்வது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது செவரக்கோட்டையார் வீதியில் 30 வயது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து ராஜேஷ் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் எழுந்தபோது மீண்டும் இவர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் கீழே விழுந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேசை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சமீப காலமாக வெள்ளையன் ஊரணி பகுதியில் மர்ம நபர்கள் முதியவர்களிடம் நகை பறிப்பு ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நடந்த வழிப்பறி சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.