உள்ளூர் செய்திகள்
சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்பு
- சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்றார்.
- அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.
சிவகங்கை
தமிழக அரசு அண்மையில் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.
சிவகங்கை கலெக்டராக இருந்த மதுசூதன்ரெட்டி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆஷாஅஜித் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக அறையில் சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்று கொண்டார்.