உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் தூய்மை பணி தொடக்கம்

Published On 2023-10-29 08:38 GMT   |   Update On 2023-10-29 08:38 GMT
  • மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூய்மை பணி தொடக்கப்பட்டது.
  • மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. 27-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாரியப்பன்கென்னடி கூறியதாவது:-

மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் மழை நேரங்களில் கால்வாய் வழியாக மழைநீர் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றிய பின்னர் கால்வாய்கள் வழியாக மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News