உள்ளூர் செய்திகள்

சாக்கோட்டை ஊராட்சி மித்ராவயலில் கால்நடை கிளை நிலையத்தில் கால்நடை மருந்தகத்தினை அமைச்சர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

விவசாய பயிர்கடன் ரூ.17 ஆயிரம் கோடி வழங்க திட்டம்

Published On 2023-10-09 08:46 GMT   |   Update On 2023-10-09 08:46 GMT
  • நடப்பாண்டில் விவசாய பயிர்கடன் ரூ.17 ஆயிரம் கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால்நடை மருந்தகத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விவ சாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் திடும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது இயற்கை விவசாயம் பெரு மளவில் மதிக்கப்பட்டு போற்றப்பட்டும் வருகிறது.

மேலும் விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்து வருவது கால்நடைகளாகும். கால் நடைகளின் உடல்நலத்தினை சரிவர பேணிக்காப்ப தற்கென தமிழக அரசால் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

அதன்படி கால்நடை களுக்கான மருத்துவ முகாம்கள் மற்றும் கால்நடை மருந்தகங்கள், கால்நடைக ளுக்கான காப்பீடுகள் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் கால்நடைகளை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வங்கி கடனுதவி களும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் நடப் பாண்டில் கூட்டுறவு துறையின் சார்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிட இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதில் விவசாய கடன் மற்றும் பயிர் கடனுதவி களுக்கு மட்டும் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.

அதேபோன்று கால்நடை வளர்ப்போர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.14 ஆயிரம் வட்டியில்லா கடனு தவியாகவும் வழங்கப்படு கிறது. இத்திட்டங்களை விவசாயிகள் முறையாக அறிந்து கொள்வதற்கென கிராமப்புறப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப் பட்டும் வருகிறது.

இவ்வாறு அவர் பேசி னார்.

இந்நிகழ்ச்சியில், தேவ கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சரண்யா, கால்நடைப் பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (காரைக்குடி) பாலசுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், மித்ராவயல் ஊராட்சி மன்ற தலைவர் ஐஸ்வர்யா, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News