உள்ளூர் செய்திகள்

வறட்சி நிவாரண பணிகளை தொடங்க கோரிக்கை

Published On 2022-12-18 08:36 GMT   |   Update On 2022-12-18 08:36 GMT
  • இளையான்குடி யூனியனில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
  • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் புக்குளி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளரும் இளையான்குடி பேரூராட்சி தலைவருமான நஜூமுதீன் முன்னிலை வகித்தார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழு அமைப்பது, தி.மு.க.வின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது, இளையான்குடி யூனியனில் பருவமழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாணவரணி சந்திரசேகர் தொண்டரணி புலிக்குட்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் சாரதி என்ற சாருஹாசன், உதயசூரியன், தட்சிணாமூர்த்தி, சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News