உள்ளூர் செய்திகள்

மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-04-16 07:14 GMT   |   Update On 2023-04-16 07:14 GMT
  • மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கானத்தான்காடு, சண்முகநாதபுரம் பஞ்சாயத்தில் அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், கோட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், காவல்துறை சார்பு ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

கானாத்தான்காடு கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே டாஸ்மாக் மதுபானகடை அமைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சண்முகநாதபுரம் ஊராட்சியில் மதுபானகடையை அமைக்ககூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை மீறி நேற்று கடை திறக்கப்பட்டதால் கிராம மக்கள் கடை முன்பு திரண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று இரவு தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். மதுபானகடையை உடனே அகற்ற வேண்டும் இல்லை என்றால் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News