உள்ளூர் செய்திகள்
- ஆ. தெக்கூர்-கீழச்செவல்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே உள்ள ஆ.தெக்கூர் மற்றும் கீழச்வசெவல்பட்டியில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (27-ந் தேதி) நடக்கிறது.
எனவே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெற்குப்பை, எஸ்.எஸ்.கோட்டை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் முறையூர் இளையாத்தன்குடி, விராமதி, சிறுகூடல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளர்.