உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது எடுத்த படம்.

ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சர்வாதிகாரி

Published On 2023-06-16 13:58 IST   |   Update On 2023-06-16 13:58:00 IST
  • ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சர்வாதிகாரி தான்.
  • பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

சிவகங்கை

சிவகங்கையில் பா.ஜ னதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் அண்ணா மலை கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழை உலக மொழி யாக்கியவர் பிரதமர் ேமாடி. பல்வேறு நாடுக ளுக்கும் சென்று தமிழை வளர்த்து வருகிறார். ஆனால் தி.மு.க. தமிைழ வைத்து வியாபாரம் செய்கிறது. புதிய பாராளு மன்றத்தில் நம்முடைய பாரம்பரிய செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் கலாச்சா ரத்தை அறிய உதவும்.

காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அப்போது ஊழல் குற்றச் சாட்டில் கனிமொழி உள்பட பலர் சிறைக்கு சென்றனர்.

தி.மு.க. ஆட்சி ஒரு குடும்பத்திற்காக நடைபெறு கிறது. பிரதமர் மோடியை சர்வாதிகாரி என தி.மு.க. வினர் பேசி வருகின்றனர். ஆமாம். அவர் ஊழலை ஒழிப்பதில் சர்வாதிகாரி தான். உலக நாடுகளின் பட்டியலில் பிரதமர் மோடி நடவடிக்கையால் இந்தியா வளர்ச்சி அடைந்து வரு கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி, மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட பார்வையாளர் சண்முக ராஜா, மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார், சுகனேஷ்வரி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, சங்கரசுப்பிரமணியன், நகர தலைவர் உதயா, மண்டல தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, லோகு முனியாண்டி, விவசாய அணி பொது செயலாளர் சரவணன், ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், ஒன்றிய பொது செயலாளர் பரம சிவம் மற்றும் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News