உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடா்பு முகாம்

Published On 2022-08-15 09:11 GMT   |   Update On 2022-08-15 09:11 GMT
  • சிவகங்கை அருகே 17-ந் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
  • பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள நாடகமேடையில் கலெக்டர் தலைமையில் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News