உள்ளூர் செய்திகள்

ஊராட்சிமன்ற புதிய கட்டிடங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

Published On 2023-03-17 08:45 GMT   |   Update On 2023-03-17 08:45 GMT
  • இளையான்குடி யூனியனில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
  • அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.

எஸ்.காரைக்குடி ஊராட்சியில் ரூ.28.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி தலைமை தாங்கி கட்டிட த்தை திறந்து வைத்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஊராட்சி துணைத் தலைவர் முத்தையா, தி.மு.க. விவசாய அணி காளிமுத்து, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதிகள் சாரதி, அய்யாச்சாமி, வடக்கு சந்தனூர் கிளைச் செயலாளர் சடைமுனி, அவைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் முனைவென்றி யில் புதியஊராட்சி மன்றக் கட்டிடம், விஜயன்குடி, மெய்யனேந்தல் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Tags:    

Similar News