மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாம்
- இளையான்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
- இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம பகுதியில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தலின்படி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம், சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாமை நடத்தியது. முள்ளியரேந்தல், நெடுங்குளம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடந்தது. மாணவிகள் வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை பதிவு செய்து பேரூராட்சி அலுவலர்களிடம் மனுக்களாக வழங்கினர். இதில் இளையான்குடி பேரூராட்சி அலுவலர்களுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் செய்யது இப்ராஹிம், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த பணியில் ஈடுபட்ட மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்பாஸ்மந்திரி பாராட்டினார்.