உள்ளூர் செய்திகள்

பந்தயத்தில் குதிரைகள் பாய்ந்தோடிய காட்சி 

குதிரை - மாட்டுவண்டி பந்தயம்

Published On 2023-04-19 08:19 GMT   |   Update On 2023-04-19 08:19 GMT
  • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
  • வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 22 ஆம் ஆண்டு குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம் இன்று காலை நடைபெற்றது.

இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் கும்பகோணம் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த13 மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி, குதிரை வண்டிகளுக்கு போக வர 8 மைல் தூரமும் சென்று வந்தன.

பெரியமாடு பிரிவில் முதலாவதாக வெளிமுத்தி வாகினி, 2-வதுவெட்டிவயல் சுந்தரேசன், 3-வது பீர்க்கலைக்காடு, வாளரமாணிக்கம் மாடுகள் பரிசு பெற்றன. சின்னமாடு பிரிவில் முதலாவது ஆலத்துபட்டி, 2-வது கண்டதேவி மருதுபிரதர்ஸ், வெளிமுத்தி வாகினி, 3-வது கோட்டையூர் மாட்டுவண்டிகள் பரிசு பெற்றன. குதிரை வண்டி பந்தயத்தில் முதலாவது உஞ்சனை புதுவயல், 2-வது கார்குடி தேவர்மகன் குனா, 3-வது ஆறாவயல் காளிதாஸ் குதிரை வண்டிகள் வெற்றி பெற்றது.ஆறாவயல் காரைக்குடி சாலையில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையாக நின்று கண்டு களித்தனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News