உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுக்கு இலவச இருதய மருத்துவ முகாம்
- காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு இலவச இருதய மருத்துவ முகாம் நடந்தது.
- 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதிக்க பதிவு செய்திருந்தனர்.
காரைக்குடி
காரைக்குடி ரோட்டரி சங்கம், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்ட பொது சுகாதார துறை இணைந்து குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாமை முத்துப்பட்டினம் வித்யா கிரி மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்து முன்னிலை வகித்தார். கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் சத்குரு தேவன் வரவேற்றார். 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதிக்க பதிவு செய்திருந்தனர்.
இதில் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளர் லியாகத் அலி, அப்பல்லோ மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவர் முத்துக்குமரன், வித்யாகிரி பள்ளி தாளாளர் சுவாமிநாதன், பொருளாளர் முகம்மது மீரா, முதல்வர் ஹேமமாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.