உள்ளூர் செய்திகள்

துண்டு பிரசுரம் வழங்கி மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு

Published On 2023-06-08 08:28 GMT   |   Update On 2023-06-08 08:28 GMT
  • துண்டு பிரசுரம் வழங்கி மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

சிவகங்கை

சிவகங்கை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்வாரிய அதிகாரிகள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மின்சார வாகனங்களை பயன்ப டுத்துவதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்க ளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் அதிக ளுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும், சுற்றுச்சூழ லுக்கு உகந்ததாக இருக்கும்.

விபத்து க்களின் போது மின்சாரம் தானாக துண்டி க்கப்படும் என்பதால், தீப்பற்றும் வாய்ப்பு இருக்காது. மேலும், பெட்ரோல் கார்களுக்கு இணையான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் மின்சார வாகனங்க ளில் உள்ள பாதகங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News