உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

Published On 2023-04-26 13:34 IST   |   Update On 2023-04-26 13:34:00 IST
  • கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
  • விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8-ம் நாளன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். சந்திவீரன் கூடத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு அன்னை காளியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், இளநீர், பால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News