கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது
- தேவகோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
- இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.
தேவகோட்டை
கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆறாவயல் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மருது அமல்ராஜ், காவலர் ரமேஷ் ஆகியோர் முள்ளிக்குண்டு அருகே காரைக்குடி தேவ கோட்டை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கானதான்காடு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு டிப்ளமோ கல்லூரி மாணவர் விஜய் (21) மறித்து சோதனை செய்தனர். இதில் அவர் 180 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.