உள்ளூர் செய்திகள்

பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-11-27 14:18 IST   |   Update On 2022-11-27 14:18:00 IST
  • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் மற்றும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு மருத்துவ கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயா ளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்து வமனைக்கு வருகை புரி யும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதல்-அமைச்சரின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு கட்டிட பணிகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News