உள்ளூர் செய்திகள்

அரசு மாதிரி பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு

Published On 2022-12-04 06:28 GMT   |   Update On 2022-12-04 06:28 GMT
  • அரசு மாதிரி பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு செய்தார்.
  • ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசின் மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்விகற்றல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தார்.

பள்ளியில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று அவர், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போதுமாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவிலான நுழைவு தேர்வு தயார் செய்யும் விதமாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதில் சிவகங்கை கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் 77 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விடுதி, கட்ட மைப்பு வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எவ்வித போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ள இந்த பள்ளிகள் தொடங்கப்ப ட்டுள்ளது. திறன்மிக்க ஆசிரியர்களை வைத்து இங்கு பாடங்கள் கற்பிக்க ப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், ஒருங்கி ணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News