உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.

கோவில் திருவிழாவில் மாட்டுவண்டி பந்தயம்

Published On 2022-09-07 08:10 GMT   |   Update On 2022-09-07 08:10 GMT
  • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
  • இந்த போட்டியை ஏராளாமான கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் ஆவணி சுற்றுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

இதில் 2 பிரிவுகளாக பெரியமாடு, சின்னமாடு பந்தயம் நடந்தது. இதில் பெரியமாடு பந்தயம் 8 மைல் தூரமும், சிறிய மாட்டு வண்டி பந்தயம் 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

இந்த போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 25 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இடையன்காடு பரணி மாட்டுவண்டி முதலிடமும், பழவரசன் ஆறுமுகம் மாட்டுவண்டி 2-வது இடமும், ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர் இ.எம்.எஸ். முகமது, பொய்யாநல்லூர் அயன் அஸ்ஸாம்மாட்டு வண்டிகள் 3-வது இடமும் பிடித்தன.

தேனி மாவட்டம் போடி சின்னக்காளைத்தேவர் பதனக்குடி சிவசாமி உடையார்மாட்டுவண்டி 4-வது இடமும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் பிரவீன் சாத்தம்பத்தி சரவணன் மாட்டுவண்டி முதலிடமும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி மருதுபிரதர்ஸ் மாட்டுவண்டி 2-வது இடமும், சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தி வாஹினி மாட்டுவண்டி மற்றும் மதுரை மாவட்டம் பரவை சிலைகாளி அம்மன்மாட்டுவண்டி 3-வது இடமும், தேனி மாவட்டம் போடி சின்ன க்காளைத்தேவர் மாட்டுவண்டி, கோட்டவயல் ராஜ்குமார் பதனக்குடி அருணாசலம் மாட்டு வண்டி 4-வது இடமும், பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி மற்றும் உரிமையாளர்களுக்கு வேட்டி, துண்டு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளாமான கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News