உள்ளூர் செய்திகள்

போட்டியில் சீறிப்பாய்நத மாட்டுவண்டிகள்.

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

Published On 2022-08-28 08:34 GMT   |   Update On 2022-08-28 08:34 GMT
  • மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
  • விழாவிற்கான ஏற்பாடு களை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள விராமதி ஊராட்சியில் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பந்தையை மாடுகளுடன் சாரதிகளும் பங்கேற்றனர். இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, பந்தயம் என 3 பந்தயமாக விராமதியிலிருந்து நெடுமறம் ஊர் எல்லை வரை சென்று திரும்ப வேண்டும் என விழா குழு கமிட்டியிணரால் நிர்ணயம் செய்யப்பட்டது.

3 கட்டங்களாக நடத்த ப்பட்ட எல்கை பந்தயத்தில் பெரிய மாடுகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசினை நல்லாங்குடி அமராவதி புதூர் முத்தையா சேர்வை, வேலு கிருஷ்ணன் அம்பலம் ஆகியோர் பெற்றனர்.2-ம் பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ். கோழி கடையும், 3-ம் பரிசை பாஸ்கரன் மகேஸ்வரியும் ,4-ம் பரிசை மாவூர் ஏஆர்.ராமச்சந்திரன் பெற்றனர்.

நடுமாடு முதல் பரிசு பரளி யாழினி பெரிய கருப்பன், 2-ம் பரிசு நல்லாங்குடி அமராவதி புதூர் வேலுகிருஷ்ணன் அம்பலம், முத்தையா சேர்வை, 3-ம் பரிசு நெய் வாசல் சாத்தி க்கோட்டை பெரியசாமி கருப்பையா சேர்வை, 4-ம் பரிசு காரைக்குடி மகிழ்மித்திரன் ஆகியோர் பெற்றனர். சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசு நல்லாம்பட்டி ஆர்விபி நித்திஷ் மங்கை, 2-ம் பரிசு ஓனாங்குடி எல்லா புகழும் இறைவனுக்கே அப்துல்லா, ஆர்.ஆர். சின்னம்மாள் வளையவயல், 3-ம் பரிசு கம்பம் வக்கீல் போது ராஜா, கூடலூர் அச்சரம் பட்டி மாதவ கோனார், நான்காம் பரிசு பில்லமங்கலம் வாசுதேவன் ஆகியோர் பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News