உள்ளூர் செய்திகள்

மருத்துவமனையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் திடீர் சாவு

Published On 2022-12-20 08:30 GMT   |   Update On 2022-12-20 08:30 GMT
  • திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் திடீரென இறந்தார்.
  • இதுகுறித்து தேவகோட்கோடை ட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கும் சினேகா (வயது 21) என்பவருக்கும் கடந்த இவருக்கும் சினேகா என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் சினேகாவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக இறந்த தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் சினேகா இறப்பு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நெடுமரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி கொடுத்தபுகாரின் பெயரில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு குறித்த தன்மையை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, கண்டவராயன்பட்டி சார்பு ஆய்வாளர் சேதுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News