உள்ளூர் செய்திகள்

கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் காட்சி.

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

Published On 2022-10-06 08:18 GMT   |   Update On 2022-10-06 08:18 GMT
  • காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.
  • 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் அருகே சொக்கநாதபுரத்தின் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் தற்சமயம் காட்டாற்று வெள்ளம் போல் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் இக்கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. தற்போதும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

எனவே இதைப் போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் புதிய குழாய்களை பதிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News