உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு
- திருப்பத்தூர் வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு 2 நாள் பயணமாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை புரிந்தார். அந்த பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக பிள்ளை யார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பத்தூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் சேதுசிவராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.