உள்ளூர் செய்திகள்

தடுப்பு கம்பியில் பைக் மோதி வாலிபர் பலி

Published On 2022-10-16 08:55 GMT   |   Update On 2022-10-16 08:55 GMT
  • தடுப்பு கம்பியில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் கல்லூரியில் படித்து வரும் தனது தங்கையை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அவர் கல்லல் அருகே உள்ள ஏழுமாபட்டி பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்ட பொது மக்கள் நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

Tags:    

Similar News