உள்ளூர் செய்திகள்

நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான பூமி பூஜை

Published On 2022-07-27 14:12 IST   |   Update On 2022-07-27 14:12:00 IST
  • நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
  • ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானாமதுரை நகராட்சி பகுதியான அரசகுலி மயானம் அருகே எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

இந்த தகன மேடைக்கான பூமி பூஜை மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பூமி பூஜையில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் , ஒன்றியசெயலாளர் அண்ணாதுரை, நகர்செயலாளர் பொன்னுசாமி , கவுன்சிலர்கள் மாரிக்கண்ணன், சண்முகப்பிரியா, புருஷோத்தமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News