உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. 

விவசாயிகளின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்

Published On 2023-07-01 08:28 GMT   |   Update On 2023-07-01 08:28 GMT
  • விவசாயிகளின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்.
  • கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொ ருட்டும், வேளாண் தொழி லை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற் கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொ ள்ளும் பொருட்டும், மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மை துறை இணை இயக்குநர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் முதல்நிலை அரசு அலுவ லர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News