உள்ளூர் செய்திகள்

முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய தொகை பெற விண்ணப்பம்

Published On 2023-03-24 08:45 GMT   |   Update On 2023-03-24 08:45 GMT
  • முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
  • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டுத் துறை யில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஒய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.

சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம்,2-ம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளை யாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணை யத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போன்ற தகுதியான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

2023-ம் வருடம் ஜனவரி மாதம் (31.1.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/Masters Sports meet) வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News