உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-29 08:23 GMT   |   Update On 2023-03-29 08:23 GMT
  • அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • மாநில செயற்குழு உறுப்பி னர்களான ஜெயமங்கலம், இணை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் லட்சுமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்களான ஜெயமங்கலம், இணை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், லோன் வழங்குதல், பிரதான மையங்களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு (இன்கிரி மெண்ட்)ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வட்டார தலைவர் உண்ணாமலை, செயலாளர் பொன்மலர், பொருளாளர் புவனேஸ்வரி, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் பாண்டி செல்வி, இணை செயலாளர்களான ஜெயா, கவிதா, வெண்ணிலா மற்றும் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News