உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-07-22 07:50 GMT   |   Update On 2022-07-22 07:50 GMT
  • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

சிவகங்கை

சிவகங்கையில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன் ஆகியோர் பேசினர்.

தி.மு.க. அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் வருகிற 25-ந் தேதி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட தலைநகரில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News