உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Published On 2023-06-05 07:38 GMT   |   Update On 2023-06-05 07:38 GMT
  • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • ஒத்தவீடு கிளை செய லாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் ஊராட்சி பூத் எண். 39, 40-ன் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணலூர் மணி மாறன் முன்னிலை வகித்தார்.

மானாமதுரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், வருகிற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெறவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர், மகளிர் உறுப்பி னர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பான ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, மணலூர் கிளை செயலாளர்கள் வீர மணி, அழகர், பிரபு, தயாளன், வெங்கட்ரமணி, மண லூர் ஒத்தவீடு கிளை செயலாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News