உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

Published On 2022-07-13 09:10 GMT   |   Update On 2022-07-13 09:10 GMT
  • பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற திட்டத்தின் மூலம் நகரத் தூய்மைக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை புனித ஜெஸ்டின் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் 'குப்பைகளை தரம் பிரித்திடுவோம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடுவோம்', "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற திட்டத்தின் மூலம் நகரத் தூய்மைக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள்உறுதிமொழி எடுத்து கொண்டனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிஸ்வரி, கவுன்சிலர்கள் அயூப்கான், ராமதாஸ்,கார்த்திகேயன், விஜயக்குமார், நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News