உள்ளூர் செய்திகள்
- சிவகங்கை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- அருண்குமார் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக பேசி உள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜ கம்பீரம் காலணியை சேர்ந்தவர் ராஜா. இவரது தங்கை ரயில்வே கேட் பக்கத்தில் இயற்கை உபாதைக்கு சென்றதை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக பேசி உள்ளார்.
இதனை ராஜா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் ராஜாவை ஆபாசமாக பேசி அறிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த ராஜா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பம் குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.