உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி கடனுதவி வழங்கினார். 

நிலத்தடி நீரை பாதுகாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

Published On 2023-03-23 08:55 GMT   |   Update On 2023-03-23 08:55 GMT
  • நிலத்தடி நீரை பாதுகாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காளையார்கோவில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.

இதில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு ஊராட்சி யில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

உலக தண்ணீர் தினமான இன்று சிவகங்கை மாவட் டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதன்மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கு வதற்கான பயனாளி பட்டியல் தேர்வு செய்வ தற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும் என்பதை அடிப்படையாக கொண்டு, முதல்-அமைச்சர் தமிழ கத்தின் அனைத்துப்பகுதி களிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.

தண்ணீர் மேலாண் மைக்கு தமிழ கத்தின் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது.

இவ்வாறு அவர் கூறி னார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் சரஸ்வதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)தனபாலன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News