உள்ளூர் செய்திகள்

சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர் படும் அபூர்வ நிகழ்வு

Published On 2022-09-14 08:31 GMT   |   Update On 2022-09-14 08:31 GMT
  • சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர் படும் அபூர்வ நிகழ்வை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
  • நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் மாதவ ஜோதி லிங்கேஸ்வரர் சமேத கூம்பாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய கதிர் வீச்சு விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளின் முதல் நாளில் இருந்து 3 நாட்கள் வரை லிங்கத்தின் மீது அதிகாலை காலை 6.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை 20 நிமிடங்கள் சூரிய கதிர்கள் விழுகின்றன. இந்த அரிய நிகழ்வு குறித்து வேதாந்த மடத்தின் மடாதிபதி மாதவ குமாரசாமி கூறுகையில், ஆவணி மாதம் பவுர்ணமியில் இருந்து 3 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடம் தெளிவாக அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்றார். இந்த நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Tags:    

Similar News