கஞ்சிக்கலய ஊர்வலத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- 34-ம் ஆண்டு கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.
- கஞ்சிக்கலய ஊர்வலத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் மேல் மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர் சக்தி பீடத்தின் 34-ம் ஆண்டு ஆடி பெரு விழா நடைபெற்றது. முன்ன தாக கொடி யேற்றத்துடன் விழா தொடங்கியது. 108 பெண்கள் கலந்து அக்னி சட்டி நடைபெற்றது. இன்று காலை கருதாவூரணியில் மலைக்கோவில் அருகில் இருந்து 5,004 பெண்கள் கலந்து கொண்ட கஞ்சிக் கலையம் எடுக்கும் நிகழ்ச்சி யை அமைச்சர் பெரியகருப் பன் தொடங்கி வைத்தார்.
உடன் நகர் மன்ற உறுப்பி னர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்த னர். இந்த கஞ்சிக்கலையம் சிவன் கோவில், பேருந்து நிலையம், திருப்பத்தூர் ரோடு வழியாக கோவில் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து யூனியன் அலுவ லகம் அருகே உள்ள ஜெயம கொண்ட விநாயகர் கோவி லில் இருந்து மகளிர் பால் குடம் எடுத்து வந்தனர்.
தேவகோட்டை ஆதிபரா சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடை பெற்று அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது.