திருவிளக்கு பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
- காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
- இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது.
காரைக்குடி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி நாளில் தமிழகத்தில உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அதன்படிநேற்று காரைக்குடி மீனாட்சி புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு 125 கிராம் பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச்சிமிழ், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, விளக்குத்திரி, தாலிக்கயிறு, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம், பூக்கள், பூச்சரம், 500 கிராம் பச்சரிசி, 100 மில்லி தீப எண்ணெய், பூஜை பை, சர்க்கரை பொங்கல், பிரசாதம், சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழஙகப்பட்டன.
இதில் அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் வினோத்கமல், கவுன்சிலர்கள் கண்ணன், பசும்பொன் மனோகரன், மைக்கேல், கலா காசிநாதன், சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை செயல் அலுவர்கள் நாராயணி, கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.