உள்ளூர் செய்திகள்

நீச்சல் வீரருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்


வெள்ளி பதக்கம் வென்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி நீச்சல் வீரருக்கு பாராட்டு விழா

Published On 2022-07-30 09:10 GMT   |   Update On 2022-07-30 09:10 GMT
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
  • 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

நெல்லை:

பாளை அண்ணா விளையாட்டரங்கில் தமிழகத்தின் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இளையோருக்கான அகில இந்திய நீச்சல் போட்டியில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் நிதிஷ்க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு நீச்சல் கழகத்தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். செயலர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Tags:    

Similar News