உள்ளூர் செய்திகள்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தமிழ் ஆசிரியரை டிஸ்மிஸ் செய்தது பள்ளி நிர்வாகம்
- வகுப்பு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 மாணவிகள் புகார் கூறினர்.
- போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழ் ஆசிரியர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
கல்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த புரட்சி மாறன் என்கிற மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராகவும் உள்ளார். இவர், வகுப்பு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 மாணவிகள் புகார் கூறினர்.
மாணவிகளின் பெற்றோரும், உறவினர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மணிமாறனை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஆசிரியர் மணிமாறனை பள்ளி நிர்வாகம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.