உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட பால் எடிசன்.

காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

Published On 2022-08-20 14:21 IST   |   Update On 2022-08-20 14:21:00 IST
  • காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  • உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியில், இளம்பெண்ணுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த வாலிபரை, கோட்டுச்சேரி போலீசார் போக்கோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர். காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இளம்பெண் சாலையில் நடக்கும் போதெல்லாம், அந்த பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கூலி வேலை செய்துவரும் பால் எடிசன் (வயது33). என்ற வாலிபர் அக்கறையோடு விசாரிப்பது வழக்கமாம். நேற்று முன்தினம், வழக்கம் போல், அந்த இளம்பெண் சாலையில் நடந்து செல்லும் போது, பால் எடிசன் என்பவர், பேசுவதுபோல் சென்று, இளம்பெண்ணை, தனது வீட்டின் கொல்லைப்புற கதவுவழியாக இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. தொடர்ந்து, இளம்பெண் அவரிடமிருந்து திமிறி ஓடியுள்ளார். அப்போது, இது குறித்து, யாரிடமாவது சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். நடந்த விபரம் குறித்து, இளம் பெண் தனது தாயிடம் கூறியுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து, இது குறித்து, கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த–னர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பால் எடிசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News