உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 முதியவர்கள் கைது

Published On 2023-03-18 09:28 GMT   |   Update On 2023-03-18 09:28 GMT
  • குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
  • முருகன், செல்வம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் செக்கடி தெருவை சேர்ந்த ஒருவரின் 8 வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளர்கள் முருகன் (வயது 55) மற்றும் செல்வம் (65) 2 பேரும் அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தன்று அதேபோல் இருவரும் அந்த பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் போது அந்த குழந்தையின் தந்தை பார்த்து இருவரையும் கண்டித்துள்ளார்.

பின்னர் அவர் இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகன், செல்வத்தை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News