உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை- கூலித்தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-12-22 08:51 GMT   |   Update On 2022-12-22 08:51 GMT
  • கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
  • சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(21). கூலித்தொழிலாளி.

இவர் தன்னுடன் பணியாற்றும் மற்றொரு கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது அந்த தொழிலாளியின் 8 வயது மகளுடன் அவர் பழகினார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஏமாற்றி அவரை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதை யாரிடமாவது வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி கடந்த 25-ந் தேதி அஜித்குமாரை, கைது செய்து, ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு நகல் ஊட்டி கிளை சிறையில் இருந்த அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது. பின், அஜித்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News