செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் மாணவர் தலைமை மாநாடு
- செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைமை மாநாடு நடைபெற்றது.
- மாணவர்கள் டைட்டன் இங்கிலீஷ் குழு, முத்தமிழ் குழு, கணித பைரேட்ஸ் குழு, அறிவியல் அட்வென்சர்ஸ் குழு என பிரிக்கப்பட்டனர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைமை மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓ2 மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் சரஸ்மீனா கலந்து கொண்டனர். பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார், தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் டைட்டன் இங்கிலீஷ் குழு, முத்தமிழ் குழு, கணித பைரேட்ஸ் குழு, அறிவியல் அட்வென்சர்ஸ் குழு என பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள மாணவர்கள் தங்களுடைய படைப்புகள் பற்றிய விரிவாக்கத்தை பெற்றோரிடம் எடுத்துரைத் தனர்.
வகுப்புகள் அனைத்தும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது . மழலையர் பிரிவு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற இவ்விழாவில் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான கணித பைரேட்ஸ் குழு முதல் பரிசை தட்டிச் சென்றது.இம்மாநாடு மாணவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்தி அவர்களின் தனித்திறமையை ஊக்கு விக்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.