திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கு
- ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக 'தனி மனித சுகாதாரம்' என்ற தலைப்பில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மகேந்திரன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.நித்தியானந்த ஜோதி வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டிலும் சுத்தம் வேண்டும் என்று கூறினார். மேலும் வரும் நோய்களை கண்டறிய சுய பரிசோதனை வேண்டும் என்றும் நோய்களை தடுக்க ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்றும் கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் நல அமைப்பு உறுப்பினர்களான பேராசிரியர்கள் முருகேஸ்வரி, முனைவர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முதுகலை மாணவிகளும் கலந்து கொண்டனர். விலங்கியல் துறை தலைவர் முனைவர் வசுமதி நன்றி கூறினார்.