கோப்பு படம்
வேடசந்தூர் : அனுமதியின்றி இயங்கிய ஆலைக்கு சீல் வைப்பு
- கஞ்சப்பன்பட்டி பகுதியில் தேங்காய் கொட்டாங்குச்சி களை எரித்து பவுடராக்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- உரிய அனுமதியின்றி செயல்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கஞ்சப்பன்பட்டி பகுதியில் தேங்காய் கொட்டாங்குச்சி களை எரித்து பவுடராக்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டாங்குச்சிகளை எரிப்பதால் ஏற்படும் புகை மற்றும் அதன் துகள்களால் விளைநிலங்கள் மாசடை கிறது. இவற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்கும் பலவித மான நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாசுகட்டு ப்பாட்டுத்துறை அதிகாரி அனிதா மற்றும் வருவா ய்த்துறை அதிகாரி கள், வேடசந்தூர் போலீசார் அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அரசு அனுமதி பெறாமல் நிறுவனம் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த எரித்த கொட்டாங்கு ச்சிகளை பொக்லைன் வாகனத்தை கொண்டு அழித்தனர். தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.