உள்ளூர் செய்திகள்
நாங்குநேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு
- நேற்று பெருமாள் அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் அவரை அரிவாளால் வெட்டினார்.
- இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
களக்காடு:
நாங்குநேரி சந்திகிணறு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது37). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 1 வாரத்திற்கு முன்பு நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பெருமாளிடம் லோடு ஏற்றி செல்ல ஆட்டோவை கொண்டு வருமாறு கூறினார். அதற்கு பெருமாள் சவாரி உள்ளதால் வர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று பெருமாள் அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் அவரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுவனை கைது செய்தனர்.