உள்ளூர் செய்திகள்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2022-12-02 10:07 GMT   |   Update On 2022-12-02 10:07 GMT
  • வீரராகவ மேல்நிலை பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
  • பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிர்வாக குழு செயலாளர் பூண்டி தனசேகரன் வாண்டையார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி ஆர் மற்றும் டி. தலைவர் டாக்டர் நடராஜன் கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் இப்பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை 21 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவக்குமார், பிரபாகரன், சூரியபிரகாஷ் வாண்டையார் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News