உள்ளூர் செய்திகள்

சென்னை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்

Published On 2022-12-01 15:21 IST   |   Update On 2022-12-01 15:21:00 IST
  • ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
  • பள்ளிகள் திறப்பு குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை:

தொடர் மழை பெய்தபோது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை விடப்பட்டது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அவ்வகையில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (டிசம்பர் 3) வேலை நாள் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News