உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு -எலக்ட்ரீசியன் கைது
- செங்கோட்டை தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்த ராஜ்குமார் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்
- மாணவியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
தென்காசி:
செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் ராஜ்குமார் (வயது 28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி(பொறுப்பு) ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.