உள்ளூர் செய்திகள் (District)

பரமத்தியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்ற போது எடுத்த படம். 

பரமத்திவேலூர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

Published On 2022-12-23 10:32 GMT   |   Update On 2022-12-23 10:32 GMT
  • பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
  • மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

இப்பணியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா, அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் அனிதா குமார், ராஜா, பார்வதி, செல்வராணி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம்

தேடி கல்வி தன்னார்வ லர்கள் மற்றும் மற்ற துறைகள் இணைந்து செய்து வருகின்றனர்.

மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ், பரமத்தி வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த பணிகளை பார்வை யிட்டார். அப்போது தங்கள் பகுதிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கண்டறி யப்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News