உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

Published On 2023-10-07 15:52 IST   |   Update On 2023-10-07 15:52:00 IST
  • ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்க ளின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத் திற்கு செலுத்த வேண்டும்.
  • நிதியினை 31-1-2024-க்குள் செலுத்த வேண்டும்

நாகர்கோவில் : நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணி கண்டபிரபு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறு வனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்க ளின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத் திற்கு செலுத்த வேண்டும்.

அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டிற்கான தொழி லாளர் நல நிதியினை 31-1-2024-க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலா ளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரி யத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரீ.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு ரூ.1000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித் தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலா ளர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கிறது.

இந்த உதவித்தொகை யினை பெற தொழிலாளர்க ளின் மாத ஊதியம் ரூ.25 ஆயி ரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரி யத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31-12-2023 ஆகும்.

விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணை யதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலா ளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News